தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 2 பல்
தக்காளி - 2
தேங்காய் - 2 துண்டுகள்
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக் கரண்டி
கடுகு, உளுந்து, சோம்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. கொண்டைக்
கடலையைத் தண்ணீரில் 6 மணி நேரம் ஊற விடவும்.
2. மறுநாள் கொண்டைக் கடலையை உப்புப் போட்டு 2 விசில் வரும் வரை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
3. அடுப்பின் மீது ஓர் ஆழமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. வெங்காயம், தக்காளி, பூண்டு சின்னதாக நறுக்கி, தாளித்த சாமான்களுடன் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
5. மிளகாய்த் தூள், மல்லித் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
6. தண்ணீரில் புளி கரைத்து அதில் ஊற்றவும்.
7. அரைத்த தேங்காயை அதில் ஊற்றி நன்றாகக் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
0 comments:
Post a Comment