தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - நூறு கிராம்
சி.வெங்காயம் - இருபது
தக்காளி - மூன்று
மல்லிப் பொடி - ஒரு டீ ஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - இரண்டு சிட்டிகை
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
தேங்காய் - இரண்டு டீ ஸ்பூன்
சோம்பு - ஒன்றரை ஸ்பூன்
கடுகு + உளுந்து - ஒன்றரை ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்பு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை ஊற வைக்க வேண்டும்.
முதலில் கொண்டைகடலையை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
புளியை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
சி. வெங்காயம் பதினெட்டையும், தக்காளியையும் வெட்டி வைக்கவும்.
தேங்காயையும் அரை ஸ்பூன் சோம்பையும் அரைக்க வேண்டும்.
கொண்டைக்கடலை முக்கால் பதம் வெந்ததும் வெட்டி வைத்த வெங்காயம், தக்காளியை அதில் போடவும்.
மல்லி பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு போடவும். புளியை கரைத்து ஊற்றவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்ததும் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு குழம்பை இறக்கி விடவும்.
ஒரு சிறிய வாணலியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து, சோம்பு போட்டு வெடித்ததும் சிறிய வெங்காயம் இரண்டை தட்டி போடவும்.
வாசனை வந்ததும் கறிவேப்பிலை போட்டு குழம்பில் கொட்டி இறுக மூடி வைக்கவும்.
0 comments:
Post a Comment