தேவையான பொருட்கள்:
சிக்கன் - ஒரு கிலோ
வெங்காயம் - இரண்டு பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி
தக்காளி - இரண்டு பெரியது
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாதூள் - இரண்டு மேசை கரண்டி
தாளிக்க
எண்ணை - நூரு மில்லி
பட்டை - இரண்டு அங்குலம் இரண்டு
ஏலக்காய் - நாலு
மிளகு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கடைசியில் தூவ
------------
மிளகு - ஒரு தேக்கரண்டி (பொடித்தது)
எலுமிச்சை - இரண்டு
கருவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - சிறிது
பட்டர் - ஒரு மேசை கரண்டி
செய்முறை:
சிக்கனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக போட்டு தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
ஒரு பெரிய வாயகன்ற சட்டியை காய வைத்து பட்டை ,ஏலக்காய்,மிளகு, கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல வதக்கி கலர் மாறியதும் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தனியாதூள் , போட்டு வதக்கி சிக்கனை போடு அதிக தீயில் கிளறவேண்டும்.
பிறகு தக்காளியை பொடியாக நருக்கி போட்டு உப்பும் சேர்த்து நல்ல கிளறி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் தக்காளியை வதங்க விட வேண்டும்.
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் வேக விட வேண்டும்.
கடைசியில் பட்டர், பொடித்த மிளகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு ஊற்றி கொத்து மல்லி தழை தூவி இரக்க வேண்டும்.
0 comments:
Post a Comment