துவரம் பருப்பு - 100 கிராம்
பட்டாணிப் பருப்பு - 50 கிராம்
தேங்காய் - அரை மூடி
சின்ன வெங்காயம் - 40
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - 3 மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1 சிறியது
கிராம்பு - 2
புளி - நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 3
இஞ்சி - கொஞ்சம்
கசகசா - 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்துமல்லி - கொஞ்சம்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. துவரம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
2. சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் உரித்துச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
4. தேங்காயில் பாதியை சிறு பல்லாக நறுக்கிக் கொள்ளவும்.
5. மீதம் உள்ள தேங்காய், கசகசா இரண்டையும் அரைத்துக் கொள்ளவும்.
6. 2 பருப்பையும் அரைத்துக் கொள்ளவும்.
7. பட்டை, கிராம்பு, இஞ்சி, வர மிளகாய் அரைத்துப் பருப்புடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
8. பாதி வெங்காயம், கறிவேப்பிலை பாதி, உப்புச் சேர்த்து அத்துடன் பிசைந்து உருண்டையாக உருட்டி இட்லித் தட்டில் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
9. அடுப்பின் மீது அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
10. மீதம் உள்ள வெங்காயம், பூண்டு போட்டுப் பொன்னிறமாக வதக்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.
11. உப்பு, புளி கரைத்த தண்ணீருடன் 4 டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்த தேங்காய் விழுதை அதில் கரைக்கவும். அதில் மிளகாய்த் தூளைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.
12. கொதிக்கும் போது வேக வைத்த உருண்டைகளை அதில் போட்டுக் கொஞ்சம் கெட்டியானதும் கொத்துமல்லித் தழை கொஞ்சம் போட்டு இறக்கவும்.
0 comments:
Post a Comment