தேவையான பொருள்கள்:தூதுவளை இலை - 1 கப்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 கப்
கொத்துமல்லி - சிறிது
எண்ணெய் - சிறிது
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகு, சீரகம் போட்டு, பொரிந்தவுடன் தூது வளை இலையைப் போட்டு நன்கு வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இத்துடன் பருப்பு வேகவைத்த தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு ஒரு கொதிவிடவும். கடைசியாக கொத்துமல்லி தூவி பரிமாறவும்.
0 comments:
Post a Comment