தேவையான பொருட்கள்:
மோர் - அரை லிட்டர்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - கால் ஸ்பூன்
துவரம் பருப்பு - அரைஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு கை பிடி
மல்லி,கருவேப்பிலை- சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பருப்பு வகையை சிறிது நேரம் ஊறவைக்கவும்.ஊறிய பின்பு அத்துடன்,மிளகாய்,சீரகம்,தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்தவற்றை மோர்,உப்புடன் கலந்து கொதிக்க வைக்கவும்.அடுப்பை சிம்மீள் வைத்து அடிக்கடி கிளரி விடவும்.அடுப்பில் கொதித்து கொண்டு இருக்கும் போது கருவேப்பிலை சேர்க்கவும்.
பின்பு கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,மிளகாய் வற்றல் தாளித்து கொட்டவும்,மல்லி இலை சேர்க்கவும்.
சுவையான மோர் குழம்பு ரெடி.
0 comments:
Post a Comment