தேவையான பொருட்கள்
1. பாசுமதி அரிசி - 1 1/2 கப்
2. கோழி - 1/2 கிலோ (எலும்போடு பெரிதாக வெட்டிவைத்தது)
3. வெங்காயம் - 1 (பெரிதாக நறுக்கியது)
4. தக்காளி - 1 ( பொடியாக நறுக்கியது)
5. பச்சை மிளகாய் - 5
6. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
7. தேங்காய் பால் - 1 1/2 கப்
8. தண்ணீர் - 1 1/2 கப்
9. கொத்தமல்லி, புதினா - 1/2 கப்
10. தயிர் - 1/2 கப்
11. எண்ணெய் - 100 மில்லி
12. நெய் - 3 தேக்கரண்டி
13. உப்பு
14. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
15. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
16. கரம் மசாலா தூள் - 1/4 தேகரண்டி
17. பட்டை
18. லவங்கம் - 5
19. பிரியாணி இலை - 1
20. ஏலக்காய் - 3
செய்முறை
கோழியுடன் பாதி தயிர், மஞ்சள் தூள், பாதி உப்பு சேர்த்து கிளறி ஊறவிடவும்.
அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய், 2 தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.
இதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
இத்துடன் மீதமிருக்கும் தயிர், மிளகாய் தூள், மீதம் உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறி 3 நிமிடம் வைக்கவும்.
நன்றாக குழைந்து மிளகாய் தூள் வாசம் போனதும், ஊற வைத்துள்ள கோழியை சேர்த்து வேக விடவும்.
கோழி வெந்ததும் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி முக்கால் பாகம் வேக விடவும்.
இப்போது அதன் மேல் கரம் மசாலா தூள் தூவி, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சிறுந்தீயில் 10 - 15 நிமிடம் தம் போடவும்.
சாதம் முழுதாக வெந்ததும் இறக்கி விடவும். சுவையான செட்டிநாட்டு கோழி பிரியாணி தயார்.
0 comments:
Post a Comment