தேவையான பொருட்கள்
1. கோழி (எலும்புடன்) - 3/4 கிலோ
2. வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1
3. தக்காளி, பொடியாக நறுக்கியது - 1
4. கறிவேப்பிலை, கொத்தமல்லி
5. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
6. மிளகாய் வற்றல் - 10
7. தனியா - 1 மேஜைக்கரண்டி
8. மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
9. பட்டை, லவங்கம்
10. கசகசா - 1 தேக்கரண்டி
11. ஏலக்காய் - 1 (விரும்பினால்)
12. தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப்
13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
14. உப்பு
15. பூண்டு - 5 பல்
16. சோம்பு - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
செய்முறை
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.
இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதங்கியதும், கோழி துண்டுகள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.
தண்ணீர் இல்லாமல் மூடி வேக விடவும். (கோழி விடும் நீரில் வெந்தால் குழம்பு ருசியாக இருக்கும்)
இதில் அரைத்த விழுது, தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்..
கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.
0 comments:
Post a Comment